Close

காணத்தக்க இடங்கள்

ஜம்புகேஸ்வர் திருக்கோவில், திருவானைக்காவல்

ஜம்புகேஸ்வர் திருக்கோவில், திருவானைக்காவல்

சிவ தலமான ஜம்புலிங்கேஸ்வர் – அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் திருவானைக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. நீரைக் குறிக்கும் பஞ்சபூத ஸ்தலமான இக்கோவில் அப்பு ஸ்தலம் என்றும் இங்குள்ள சிவலிங்கம் அப்புலிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு கருவறையில் உள்ள சிவலிங்கம் உள்ளே பாயும் சிறிய ஊற்றில் மூழ்கி இருக்கும். முற்காலத்தில் யானை ஒன்று புனித ஜம்பு மரத்தின் கீழே நின்று சிவபெருமானை வணங்கியதால் இந்தக் கடவுள் ஜம்புகேஸ்வரர் எனப் பெயர் பெற்றார். திருவானைக்காவல் சென்னை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சிக்கும் திருவரங்கத்திற்கும் நடுவே உள்ளது. இந்தக் கோவில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது


மாரியம்மன் கோவில், சமயபுரம்

மாரியம்மன் கோவில், சமயபுரம்

திருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள சமயபுரம் அங்குள்ள மாரியம்மன் கோவில் காரணமாகப் புகழ் பெற்றது ஆகும். தற்போதுள்ள கோவில் விஜயராய சர்க்கரவர்த்தியால் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. ஏப்ரல்-மே மாதங்களில் இந்தக் கோவிலில் தேரோட்டத் திருவிழா சிறப்பாக நடைபெறும்.சமயபுரம் பண்டைய காலத்தில் சோழர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ஊர் முன்னாளில் கண்ணனூர், கண்ணபுரம், விக்கிரமபுரம் மற்றும் மாகாளிபுரம் என அழைக்கப்பெற்றது. இங்கு மார்ச் மாதத்தில் பூச்சொறிதலும் ஏப்ரல் மாதத்தில் தேர்த்திருவிழாவும் நடைபெறும்


புனித மரியன்னை பேராலயம் , மேலப்புதூர்

புனித மரியன்னை பேராலயம் மேலப்புதூர்,திருச்சிராப்பள்ளி

புனித மரியன்னை பேராலயம் திருச்சியில் மேலப்புதூரில் அமைந்துள்ளது. இப்பேரலாயம் மிகவும் பழமை வாய்ந்த பேராலயங்களில் ஒன்றாகவும், திருச்சிராப்பள்ளியிலுள்ள மற்ற பேராலாயங்களுக்கு தலைமையிடமாகவும் விளங்குகிறது. 175 ஆண்டு கால பழமை வாய்ந்த இப்பேராலயம் 2015ஆம் ஆண்டில் புதுப்பொழிவுடன் மீண்டும் வடிவமைக்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி புனித மரியன்னை பேராலயம் தூத்துக்குடி, மதுரை, பாளையங்கோட்டை, சிவகங்கை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள பேராலயங்களுக்கு தலைமையிடமாக இருக்கிறது. இப்பேராலயம் தினமும் காலை 5.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பிரார்த்தனை காலை 5.00 மணி, 6.30 மணி, 8.30 மணி மற்றும் மாலை 6.00 மணி ஆகிய நேரங்களில் நடைபெறும். வாரநாட்களில் காலை 6.00 மணிக்கும் மாலை 6.00 மணிக்கும் பிரார்த்தனை நடைபெறும்.


நாதிர்ஷா தர்கா: (5 கி.மீ)

நாதிர்ஷா தர்கா

ஆயிரம் ஆண்டு பழமையான இத்தர்கா, இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு “உர்ஸ்” என்ற திருவிழா வெகுச்சிறப்பாக நடைபெறும். தமிழ்நாட்டின் பல இடங்களில் இருந்தும் மக்கள் இங்கு நடைபெறும் திருவிழாவைக் காண வருகை புரிகின்றனர். (Ph: 0431 – 2700401)


பச்சமலை: (80 கி.மீ)

பச்சமலை

துறையூர் அருகே அமைந்த ஒரு பசுமை மலைத்தொடர்தான் பச்சமலை. இயற்கையை ரசிக்க இது ஓர் மிகச்சிறந்த இடமாகும். இங்கு வசிக்கும் பழங்குடி மக்களின் பழக்கவழக்கங்களும், வாழ்க்கைமுறைகளும் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது (தொலைபேசி எண். – 04327-222706)


புளியஞ்சோலை: (72 கி.மீ)

புளியஞ்சோலை

வனப்பகுதியில் மலை அடிவாரத்தில் நீரோடைகளும், சிற்றருவிகளும் நிறைந்த பசுமையான மற்றும் ஓர் அழகான சுற்றுலா இடம். கொல்லிமலைகளின் உச்சியில் ”தட்சினகங்கா” என்று அழைக்கப்படும் நீர்வீழ்ச்சியின் மருத்துவ குணங்கள் நிறைந்த நீர், புளியஞ்சோலையை அடைந்து, காவிரியின் துணை நதியான கொள்ளிடத்தில் இணைகிறது. இது ஒரு வற்றாத நீரோடையாகும். (தொலைபேசி எண். – 04327-252257)


முக்கொம்பு: (18 கி.மீ)

முக்கொம்பு

திருச்சி – கரூர் சாலையில் அமைந்துள்ள முக்கொம்பு அணைக்கட்டு, காவிரி ஆற்றினைத் தடுத்து காவேரி, கொள்ளிடம் என இரண்டு ஆறாகப் பிரித்துவிடப்படுகிறது. ரம்மியமான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் பசுமையான மரங்கள் நிறைந்த சுற்றுலாத் தலமாகும். (தொலைபேசி எண். – 0431-2410719 )


வண்ணத்துப்பூச்சி பூங்கா, மேலூர் (ஸ்ரீரங்கம்): – (18 கி.மீ)

வண்ணத்துப்பூச்சி பூங்கா

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 25 ஏக்கர் பரப்பளவில் சுமார் 8.00 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றங்கரையோரமாக அமைந்துள்ளது.
நட்சத்திரவனம் ஒரு முக்கிய சிறப்பம்சமாகும். பூங்கா திறக்கப்படும் போதெல்லாம் பொதுமக்களால் மரங்கன்றுகள் இலவசமாக நட்டு வைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. (தொலைபேசி எண். – 0431-2414265 )


கோளரங்கம் (6 கி.மீ)

கோளரங்கம்

அண்ணா அறிவியல் கோளரங்கம் புதுக்கோட்டை சாலையில் விமான நிலையம் அருகே அமைந்துள்ளது. தினந்தோறும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவியல் விளக்கக் காட்சிகள் திரையிடப்படும். காட்சி நேரம்: தமிழ் : காலை 10.30 மணி, மதியம் 1.00 மணி, லை 3.30 மணி, மாலை 4.45 மணி: ஆங்கிலம்: காலை 11.45 மணி, மதியம் 2.15 மணி  நுழைவுக் கட்டணம் : பெரியவர்கள்: ரூ.12/- குழந்தைகள்: ரூ.6/- (12 வயதிற்கு கீழே)

சுற்றுச்சூழல் அருங்காட்சியகம்:

பெரியவர்கள் : ரூ.5/- குழந்தைகள் : ரூ.2/- அறிவியல் பூங்கா நுழைவுக் கட்டணம்: ரூ.1/-
நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை  விடுமுறை: (3 தேசிய விடுமுறை நாட்கள் மட்டும்)   (தொலைபேசி எண். – 0431-23311921, 2332190 )


அரசு அருங்காட்சியகம்: (5 கி.மீ)

அரசு அருங்காட்சியகம்

திருச்சி அரசு அருங்காட்சியகம் 1983ஆம் ஆண்டு இராணுவக் குடியிருப்பு வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1997-ல் இது டவுன்ஹால் வளாகத்தில் உள்ள நாயக்கர் ராணி மங்கம்மாள் தர்பார் ஹாலுக்கு மாற்றப்பட்டது. இங்கு காட்சிக்காக 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்காலப் பொருட்கள், கல்வெட்டுக்கள், கற்சிலைகள், சிற்பங்கள், போர்த்தளவாடங்கள், பெருங்கற்காலப் பொருட்கள், பழங்கால நாணயங்கள் போன்றவற்றைக் காணலாம்.
நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நுழைவுக் கட்டணம்: பெரியவர்கள்: ரூ.5/- சிறியவர்கள்: ரூ.3/- வெளிநாட்டவர்: ரூ.100/- (தொலைபேசி எண். – 0431-2708809 )