Close

வரலாறு

உறையூர் திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதி, சோழர்களின் தலைநகரமாக 300 பி.சி. முதல் இருந்துவருகிறது. இது தொல்பொருள் சான்றுகள் மற்றும் பண்டைய இலக்கியங்கள் மூலம் ஆதரிக்கப்படுகிறது. சோழர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உறையூர் தொடர்ந்து இருந்தமைக்கான இலக்கிய ஆதாரங்கள் உள்ளன.பின்னர், உறையூர் இன்றும் திருச்சிராப்பள்ளி மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகள், கி.பி. 590 இல் மகேந்திர வர்மா பல்லவரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. கி.பி. 880 வரை, கல்வெட்டுகளின் படி, இந்த பகுதி பல்லவர்களின் மற்ரும் பாண்டியர்கள்மேலாதிக்கத்தின் கீழ் இருந்தது . AD 880 பிறகு திருச்சிராப்பள்ளி மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகள் அனைத்தும் சோழப்பேரரசின் பகுதியாக மாறியது. 1225 வில் ஹொய்சாளர்களால் அந்த பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது. அதன் பின்னர், முகலாய ஆட்சியின் வருகைக்கு பின்னர் அது பாண்டியர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. திருச்சிராப்பள்ளி சில காலம் முகலாய ஆட்சியின் கீழ் இருந்தது, பின்பு விஜயநகர ஆட்சியாளர்களின் கீழ் வந்தது.

விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆளுநர்களான நாயக்கர்கள் 1736 ஆம் ஆண்டு வரை இந்த பகுதியை ஆட்சி செய்தார். தெப்பக்குளம் மற்றும் மலைக்கோட்டையை கட்டியவர் விஸ்வநாத நாயக்கர் ஆவார். மீனாட்சியாரின் அரசு ஆட்சிக்கு பிறகு நாயக்கர்கள் வம்சம் முடிவடைந்தது. முஸ்லிம்கள் இந்த பிராந்தியத்தை பிரெஞ்சு அல்லது ஆங்கிலேய இராணுவங்களின் உதவியுடன் மீண்டும் ஆட்சி செய்தனர். சில ஆண்டுகளுக்கு, திருச்சிராப்பள்ளி சாந்தா சாஹிப்பின் மற்றும் முகமது அலி ஆட்சியின்கீழ் இருந்தது. இறுதியாக ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் திருச்சிராப்பள்ளி மற்றும் பிற பகுதிகளை கொண்டு வந்தனர். ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்தின் கீழ் இந்த மாவட்டமானது 150 ஆண்டுகளாக இந்தியாவின் சுதந்திரத்திறகு முன் வரை இருந்தது.

காவேரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் திருச்சிராப்பள்ளி, மாநிலத்தின் நான்காவது பெரிய நகரமாக இருந்தது, ஆரம்பகால சோழர்களின் கோட்டையாக இருந்தது, பின்னர் பல்லவர்களிடம் விழுந்தது. ஆனால் பல்லவர்கள் உண்மையில் இந்த நகரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை, பல முறை பாண்டியர்களிடம் அதை இழந்தனர். 10 ஆம் நூற்றாண்டில் மீண்டும் சோழப்பேரரசின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. சோழப்பேரரசின் சரிவிற்கு பின் விஜயநகர கோட்டையாக ஆனது.

1565 ஆம் ஆண்டில் இந்த பேரரசு வீழ்ச்சியுற்றபோது, மதுரை நாயக்கர்கள், மராட்டியர்கள், நவாப்கள், பிரெஞ்சு மற்றும் இறுதியாக பிரிட்டிஷ் ஆகியோர் திருச்சியை ஆக்கிரமித்தனர். 18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் மேலாதிக்கத்திற்கான பிரிட்டிஷ்-பிரஞ்சு போராட்டத்தின் போது கர்நாடகத்தின் போர்களை எதிர்த்துப் போராடிய முக்கிய மையங்களில் இதுவும் ஒன்றாகும். மதுரை நாயக்கர்கள் கீழ் இருந்ததபோது திருச்சி அதன் முழுமையான செழிப்புடன் வளர்ந்ததோடு இன்றும் அது செழித்தோங்கிய நகரமாக உள்ளது. கோட்டையைத் தவிர 1760 முற்பட்ட பல திருக்கோவில்கள் உள்ளன

சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் திருச்சி தமிழ்நாட்டின் மையப்பகுதியாக உள்ளது.