சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையம்-பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | இறுதி நாள் | கோப்பு |
|---|---|---|---|---|
| சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையம்-பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) செயல்பட்டு வருகிறது. அம்மையத்தில் சுழற்சி முறையில் பணிபுரிய கீழ்க்கண்ட பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை 30.05.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியில் கிடைத்திடுமாறு அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. |
15/05/2026 | 30/05/2026 | பார்க்க (106 KB) |